அழகியலும் ரசனையும்
அழகியலும் ரசனையும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை.
அழகியல் ரசனையை வளர்க்கிறது
ரசனை அழகியலை மென்மேலும் வளரத்துணை புரிகிறது.
அழகு எல்லா இதயங்களிலும் இன்ப உணர்வலை களை ஏற்படுத்துகிறது.அழகிலே மயங்காதவர்கள் மிகவும் அபூர்வம். அழகிற்கு இருக்கும் மௌஸைக்கண்டு தம்மை அழகுபடுத்திக்கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்வு பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் வளர்ந்து வருகிறது.
திரைப்படங்கள்,டி .வி., பத்திரிகைகள் , கணினி, என்று எல்லா ஊடகங்களிலும் அழகின் ஆதிக்கம் மிகுந்து வருவதை கண்கூடாகக் காண்கிறோம்.
அழகிற்கு மெருகூட்ட ஒப்பனைக்கலை ஒப்பனைக்கலை உறுதுணை.
ஒப்பனைக் கலை இன்று நேற்று ஏற்பட்டதல்ல.அஜந்தா ஓவியங்களில் தம்மை ஒப்பனை செய்துகொள்ளும் அழகிகளைக் காணலாம்.
எங்களிடம் அழகு இல்லை. என்ன செய்ய?
அழகே வா என்று கூப்பிட்டால் அது வந்துவிடுமா ?இல்லாத அழகை எப்படிக் கூப்பிட்டாலும் அது வராதே என்ற சந்தேகம் ஏற்படுவது இயல்பு தான். ஆனால் நன்கு கவனித்துப் பார்த்தால் அழகில்லாத படைப்பே உலகில் இல்லை. உலகில் அழகு இல்லாத ஆணோ பெண்ணோ ஒரு சிறிதேனும் கவர்ச்சி இல்லாத ஆணோ பெண்ணோ இல்லவே இல்லை. அழகு தமக்கு இல்லாததாகக் கற்பனை செய்துகொண்டு , தங்கள் முகத்தோற்றத்தையும் நடை உடை பாவனைகளையும் மாற்றி மாற்றி அமைக்கும் முயற்சி நடந்தவாறு இருக்கிறது.
நீங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறீர்கள்!
உங்கள் தலைமுடி எத்தனை ஆக!
உங்கள் முகத்தில் இளமை ஒளி வீசுகிறதே, அது எப்படி?
உங்கள் தோற்றம் மிகவும் எடுப்பாக இருக்கிறது.
இப்படி யாராவது நம்மைப் பார்த்துக் கேட்டால் மனம் எவ்வளவு பூரிப்பு அடைகிறது! எவ்வளவு பெருமைப் படுகிறோம்!
இளைஞர், வயது வந்தோர், ஏழை, பணக்காரர், பெண்கள், ஆண்கள், அதிகாரி, ஊழியர் என்று எவராயினும் ஒரு சிறிய பாராட்டுக்கு ஏங்காமல் இல்லை. அந்தப் பாராட்டுக்கு இருக்கிற மந்திர சக்தியே தனி.
நம் அழகு சிறிது பாராட்டப்பட்டால் கூட நாம் அடைகின்ற மகிழ்ச்சிக்கு ஈடு இணை கிடையாது. எல்லோருமே அழகை விரும்புகிறார்கள். தாம் அழகாகத் தோற்றம் அளிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள்.
சிலர் தாங்கள் அழகாக இல்லையே என்று குறைப்பட்டுக் கொள்கிறார்கள். அது அறியாமை. உண்மையில் இறைவன் படைப்பில் எல்லோருக்கும் ஓர் தனி அழகு இருக்கிறது. அழகு இல்லாதவர் என்று எவருமே இல்லை. இருக்கின்ற அழகைப் பராமரித்து மெருகேற்ற வழி தெரியாததால் நம் அழகை நாம் உணர முடியவில்லை.
இது நவீனமாகி வரும் உலகம். தற்போது ஆண், பெண் இருவருக்குமே தோற்றப் பொலிவு தேவைப்படுகிறது. காரணம், ஒருவரை அவரது ஒப்பனை, நடை உடை பாவனை இவற்றை வைத்துத் தான் இமமக்கள் மதிக்கிறார்கள்.
நாலு பேரிடம் நம்மைப் பற்றி நல்ல மதிப்பு வருவதற்கு நமது தோற்றம் பெரிதும் உதவும். அழகிய முகம், கண்ணியமான உடை இவை எல்லோராலும் விரும்பப்படுகின்றன அல்லவா?
அலங்கோலமாக, பிறர் மனத்தில் அருவறுப்பு ஏற்படும் விதத்தில் தோன்ற யாராவது விரும்புவார்களா? நாமே அப்படி இருக்கிற ஒருவரை மதிப்போமா? மாட்டோமே.
இந்த மதிப்பீடுதான் அழகுக் கலையின் தோற்றத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும் ஆணி வேர்கள்.
இன்று மாநகரங்கள் மட்டுமின்றி சிறு நகரங்கள், பெரிய கிராமங்கள் கூட அழகுக் கலையில் அக்கறை காட்டுகின்றன. குறிப்பாக, மகளிருக்கு அந்தத் தேவை அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம்.
ஏற்கனவே அச்சுப்புத்தகமாக தாரிணி பதிப்பகத்தினரால் வெளியான இந்த நூலில் தலை முடி தொடங்கி நெற்றி, முகம், சருமம், கை, நகங்கள், கால்கள் மற்றும் பாதம் வரை அழகுபடுத்துவது எப்படி என்று சுருக்கமான அறிமுகம் தந்துள்ளோம்.
அவற்றை அறியும் முன்பு மேற்கூறிய பொதுவாக அழகு பற்றிய சில அவசியமான விவரங்களை அறிவோம்.
நாம் எல்லோருமே நமக்கு இருக்கின்ற அழகைப் பெருக்கவும் பாதுகாக்கவும் அடிப்படைத் தேவையானவை என்னென்ன?
1. உடல்நலம்
2. சமச்சீரான சத்துணவு
3. உடல் சுத்தம்
4. உடற் பயிற்சி
5. மகிழ்ச்சியான மனம்